ஆப்நகரம்

காவல்துறை உதவியுடன் காதலரின் திருமணத்தை நிறுத்திய பெண்!

காவல்துறையின் உதவியுடன் காதலரின் திருமணத்தை இளம் பெண் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 1 Feb 2017, 4:29 pm
சென்னை: காவல்துறையின் உதவியுடன் காதலரின் திருமணத்தை இளம் பெண் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil woman seeks police help to stop her boyfriends marriage
காவல்துறை உதவியுடன் காதலரின் திருமணத்தை நிறுத்திய பெண்!


கும்மிடிப்பூண்டியில் வேறு ஒரு பெண்ணுடன் தனது காதலருக்கு நடைபெறவிருந்த திருமணத்தை பொன்னேரி காவல் கண்காணிப்பாளர் உதவியுடன் இளம் பெண் தடுத்து நிறுத்தியுள்ளார். இது தொடர்பாக இளம்பெண் அளித்த புகாரில், சூர்யபிரகாஷ் (27), என்பவர் பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பணியாற்றி வருகிறார். அதே கல்லூரியில் தானும் கடந்த சில ஆண்டுகளாக படித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்ததையடுத்து, 5 ஆண்டுகள் வரை இருவரும் காதலித்து வந்துள்ளனர். சமீபக காலமாக சூர்யபிரகாஷ் தன்னை ஒதுக்கி வந்ததால் வருத்தத்தில் இருந்ததாகவும், இது குறித்து இருவருக்கும் பொதுவான சில நண்பர்களிடம் கேட்டபோது, சூர்யபிரகாஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயமாகி வருகிற வியாழக்கிழமை கும்மிடிப்பூண்டியில் திருமணம் நடைபெறவிருக்கும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, தன்னை காதலித்து வந்த சூர்யபிரகாஷ் திருமணம் செய்துக் கொள்வதாக வாக்குறுதியளித்துவிட்டு தற்போது தன்னை ஏமாற்றிவிட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார். இளம்பெண்ணின் புகாரை ஏற்ற பொன்னேரி காவல் கண்காணிப்பாளர் சூர்யபிரகாஷின் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.

A 23-year-old woman on Wednesday approached the Ponneri deputy superintendent of police to stop the marriage of her boyfriend with another girl, to be held in Gummidipoondi on Thursday.

அடுத்த செய்தி