ஆப்நகரம்

முன்னாள் மனைவியை பார்க்க சென்ற கணவன் சுத்தியால் அடித்துக் கொலை

பெருங்களத்தூர் அருகே முன்னாள் மனைவியை பார்த்துவிட்டு வந்த கணவரை, ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி, அவரது தலையில் இரவு தூங்கும்போது சுத்தியலால் அடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

TNN 19 Mar 2017, 12:32 pm
சென்னை: பெருங்களத்தூர் அருகே முன்னாள் மனைவியை பார்த்துவிட்டு வந்த கணவரை, ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி, இரவு தூங்கும்போது ​அவரது தலையில் சுத்தியலால் அடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil woman smashes hubby to death for visiting first wife
முன்னாள் மனைவியை பார்க்க சென்ற கணவன் சுத்தியால் அடித்துக் கொலை


கணேஷ்(45) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து இரண்டாவது மனைவி சத்யாவுடன் சண்டையிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக வீட்டிற்கு தாமதமாக வரும் கணவர் மீது சந்தேகப்பட்டு விசாரித்ததில், அவர் விழுப்புரத்தில் உள்ள முதல் மனைவியை சென்று பார்த்து வந்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சத்யா தொடர்ந்து கணவருடன் சண்டையிட்டு வந்துள்ளார். முதல் மனைவியிடம் இருந்து விலகி இருக்கச் சொல்லி கேட்டுக் கொண்டும் கணேஷ் அதனை கேட்கவில்லை. இந்நிலையில், இரண்டு நாட்கள் விழுப்புரத்தில் தங்கிவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் சத்யா கணேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு உறங்கச் சென்றுள்ளார். ஆத்திரத்தில் இருந்த சத்யா சுத்தியலை எடுத்து கணேஷின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்துக்கு புகார் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் கணேஷின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தபின் சத்யாவையும் கைது செய்தனர்.

A 36-year-old woman murdered her husband by smashing his head with a hammer while he was asleep at their house in Perungalathur on Friday night.

அடுத்த செய்தி