ஆப்நகரம்

கல்யாண கலாட்டா...உடைக்கப்பட்ட பெண்ணின் மூக்கு!

திருமண மண்டபத்தில் உறவினர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மூக்கு உடைக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 27 Oct 2020, 9:12 pm
சென்னை ஜாம்பஜார் பகுதியை சேர்ந்தவர் ஹயாத் நிஷா. இவர் நேற்று, எழும்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமணத்துக்கு சென்றுள்ளார்.
Samayam Tamil மூக்கு உடைப்பு
பெண்ணின் மூக்கு உடைப்பு


திருமண மண்டபத்தில் உறவினர்களுடன் விளையாட்டாக பேசிக் கொண்டிருக்க, விளையாட்டான பேச்சு வினையாகி கைகலப்பு, அடிதடி வரை சென்றது.

இதில் நிஷாவின் மூக்கில் அவரது உறவினர் விட்ட குத்தில் அவரது மூக்கு உடைந்த ரத்தம் கொட்டியது. திருமண மண்டபத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது.

5 மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டம், தலைநகரில் பெரும் அதிர்ச்சி

மூக்கு உடைப்பட்ட ஹயாத் நிஷா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி