ஆப்நகரம்

தமிழகத்தில் முதல்முறையாக சென்னையில் பெண்கள் பாதுகாப்பு மையம் திறப்பு!

தமிழகத்தில் முதல்முறையாக சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 3 Aug 2018, 4:01 pm
தமிழகத்தில் முதல்முறையாக சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil cats
தமிழகத்தில் முதல்முறையாக சென்னையில் பெண்கள் பாதுகாப்பு மையம் திறப்பு!


சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு அரசு, பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்தவகையில் தமிழகத்தில் முதல்முறையாக சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பு, மையத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் இன்று திறந்துவைத்தார்.

தேசிய மகளிர் ஆணையமும், தமிழக காவல்துறையும் இணைந்து செயல்படுத்தும் இந்த இந்த மையத்தில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள், உளவியல் ஆலோசகர்கள், மகளிர் போலீசார் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள்.

பெண்களுக்கெதிரான அனைத்துவகை புகார்களும் இங்கு விசாரிக்கப்படும். திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் இந்த மையத்திலேயே புகார்கள் பெறப்படும். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த மையத்தில் உள்ள பிரதிநிதிகள், சென்னையில் உள்ள மற்ற காவல் நிலையங்களுக்கு சென்று பெண் வன்கொடுமைகள் உள்ளிட்ட புகார்களை விசாரிப்பர். அத்துடன், 94983 36002 என்ற செல்போன் எண் மூலமாகவும் பெண்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்