ஆப்நகரம்

பாய் ஃபிரண்டுக்கு நிர்வாண படம் பகிர்ந்த இளம்பெண்... அதிர்ந்து போன அப்பா!

இன்ஸ்டாகிராமில் நிர்வாண படம் பகிர்ந்த இளம்பெண்ணுக்கு ஆபாச மிரட்டல் விடுத்த அவரது பாய் ஃபிரண்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Samayam Tamil 20 Nov 2020, 8:38 am
சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் வசித்து வரும் ஒரு கல்லூரி மாணவியின் தந்தை, தன்னுடைய மகளிடம் இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்ட நபர் உடன் பயிலும் கல்லூரி மாணவிகளின் தொலைபேசி எண்களை கேட்டதாகவும், மறுத்தால் தன் மகளின் நிர்வாண புகைபடங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுவிடுவதாக தொடர்ந்து மிரட்டிவருவதாகவும் அடையாறு துணை ஆணையாளரிடம் புகார் அளித்தார்.
Samayam Tamil இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த நபர்
சென்னை -இளம்பெண்ணுக்கு ஆபாச மிரட்டல் விடுத்த நபர்


இந்த புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பெண்ணை தொடர்பு கொண்ட நபரின் மொபைல் எண்களை ஆராய்ந்து பார்த்ததில், தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வரும் அருண் கிரிஸ்டோபர் (25) என்பதும், அவர் BE Aeronatical Engineering படித்துவிட்டு மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.

அவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பராக கல்லூரி மாணவியிடம் அறிமுகம் ஆனதும் பின் நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார். காதலிப்பதாக ஆசைவார்ததை கூறி விடியோ கால் மூலம் பேசி 2 மாத பழக்கத்திலேயே கல்லூரி மாணவி தன்னுடைய நிர்வாண புகைபடங்களை பகிரும் அளவிற்கு நெருக்கமாகியுள்ளனர்.

சௌகார்பேட்டை படுகொலை: முக்கிய குற்றவாளியான ஜெயமாலா கைது..!

பின்னர் அம்மாணவியின் பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பெற்று கொண்டு அதிலிருந்து அவரின் கல்லூரி தோழிகள் அனைவருக்கும் குறுந்தகவல் அனுப்பி வலை வீசியதும், அதில் பதில் அளித்தவர்களுக்கும் ஆசை வார்த்தைகளை பேசி தன் லீலைகளை தொடர்ந்துள்ளார்.

கல்லூரி தோழிகள் சிலர் தங்களின் தெலைபேசி எண்ணிற்கு அநாகரீகமான வகையில் குறுந்தகவல்கள் வருவதை பார்த்து அதிர்ந்து போனவர்கள் அம்மாணவியின் தந்தையிடம் புகார் அளித்துள்ளனர்.

பிரபல நடிகையின் வீட்டில் திருட முயன்ற இயக்குநர் கைது!

அதிர்ந்து போன இளம்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், அந்த நபர் கைது செய்யப்பட்டதுடன், அவர் பயன் படுத்தி வந்த லேப்டாப் மற்றும் இரண்டு செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. அவரின் செல்போனை ஆராய்ந்த சைபர் கிரைம் பிரிவினர் அதில் easy wallet என்ற Cloud App மறைத்து வைத்திருந்தை கண்டறிந்தனர்.

உரிய மென்பொருள் மூலம் அதை மீட்டெடுக்கப்பட்டதில் பல பெண்களின் நூற்றுக்கணக்கான புகைபடங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ந்த காவல் துறையினர், அவரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி