ஆப்நகரம்

வடபழனியில் பயங்கரம்: நகைக்காக இளம்பெண் கொலை!

சென்னை வடபழனியில் இளம் பெண்ணை கட்டிப்போட்டு அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 5 Apr 2018, 3:23 pm
சென்னை வடபழனியில் இளம் பெண்ணை கட்டிப்போட்டு அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil gold


சென்னை வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாலா கணேஷ். இவர் சிவன் கோயிலில் குருக்களாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பிரியா. இந்த நிலையில், இன்று காலை பிரியா கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதே போன்று, பாலா கணேஷூம் கை, கால்கள் கட்டப்பட்டு, கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான் நிலையில் கிடந்துள்ளார். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி வடபழனி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரியாவின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், பாலா கணேஷையும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் வீட்டில் அங்கும் இங்குமாக சிதறிக்கிடந்த நகைகளை வைத்து பார்க்கையில் இது நகைக்காக நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை வைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்