ஆப்நகரம்

சென்னையில் பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளையடிக்கும் கொடூரன் சிக்கினான்!

சென்னை: கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 17 Dec 2018, 12:55 am
சென்னையை அடுத்த ஆவடி, அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர், முகப்பேர் பகுதிகளில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வந்தன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசாருக்கு புகார்கள் சென்றன.
Samayam Tamil Chennai Arrest


இதையடுத்து அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன், அம்பத்தூர் உதவி ஆணையர் கர்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. இந்த சூழலில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், நேற்று முன் தினம் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது பட்டரைவாக்கம் பகுதியில் பைக்கில் வேகமாக வந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். சந்தேகத்தின் பேரில், அவரைக் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர் திருமுல்லைவாயல் லலிதாம்பாள் நகர் 17வது தெருவைச் சேர்ந்த அறிவழகன்(29) என்று தெரியவந்தது.

இவர் அம்பத்தூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். மேலும் அம்பத்தூர், கொரட்டூர், பாடி, முகப்பேர் உள்ளிட்ட இடங்களில் தனியாக வசிக்கும் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் கண்டறியப்பட்டது.

இவர் மீது ஏற்கனவே 15 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவரிடம் இருந்து 25 சவரன் நகை மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இவரைக் கைது செய்த போலீசார், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி