ஆப்நகரம்

சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞர் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்!

சிறுமியை திருமணம் செய்து, அவருடன் குடும்பம் நடத்தி வந்த இளைஞரை திருவொற்றியூர் போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 30 Jan 2021, 1:23 pm
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீண் (27). தனியார் நிறுவ ஊழியரான இவர் உடல்நலக் குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
Samayam Tamil சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது
சென்னை திருவொற்றியூரில், சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது


அப்போது அங்கு சிகிச்சை பெற்றுவந்த உறவினரை கவனித்து கொள்வதற்காக அவ்வபோது மருத்துவமனைக்கு வந்து சென்ற எண்ணூரை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பிரவீணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மருத்துவமனையில் நேரில் பார்த்து பேசி பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில், திருவொற்றியூர் தேரடி வீதியில் உள்ள உறவினரின் இல்ல விழாவுக்கு கடந்த 18 ஆம் தேதி சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

லவ் ஃபெயிலியர்... திருச்சியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியின் செல்ஃபோன் சிக்னலை வைத்து ஆராய்ந்தபோது அவர் பெரும்பாக்கத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனே அங்கு சென்ற போலீசாருக்கும், சிறுமியின் தாய்க்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

பிரவீணும், சிறுமியும் அண்மையில் மேல்மருவத்தூர் கோயிலில் திருமணம் செய்து கொண்டதுடன், பெரும்பாக்கத்தில் குடும்பம் நடத்தி வருவதும் போலீசாருக்கு தெரிய வந்தது.

சென்னை டூ மைசூர்... ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

இதனையடுத்து சிறுமியை ஆசை வார்த்தைக் காட்டி திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி