ஆப்நகரம்

சென்னையில் உயிரை பறிக்கும் ஆபத்து- பைக் ரேஸில் மீண்டும் ஈடுபடும் இளைஞர்கள்!

மிகவும் ஆபத்தான பைக் ரேஸில் இளைஞர்கள் மீண்டும் ஈடுபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Nov 2019, 10:23 am
பொழுதுபோக்கிற்காக இரவு நேரங்களில் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் ஒருகட்டத்தில் அதற்கு அடிமையாகும் சூழல் ஏற்படுகிறது. பணம் வைத்து விளையாடும் அளவிற்கு ஆர்வம் தொற்றிக் கொள்கிறது.
Samayam Tamil Bike Race


இது சில சமயங்களில் உயிரை பறிக்கும் வகையில் ஆபத்தை விளைவித்து விடுகிறது. மேலும் பொதுமக்களுக்கும் இடையூறாக அமைகிறது. சென்னை ஈசிஆர் சாலையில் இரவு நேரங்களில் இளைஞர்கள் அடிக்கடி பைக் ரேஸில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த சர்ச்சை- போலீசாரை செமயா கலாய்த்து வீடியோ வெளியிட்ட நித்யானந்தா!

இதுதொடர்பாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இளைஞர்களை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்து வந்தனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன்பிறகு பைக் ரேஸ் சம்பவங்கள் குறைந்திருந்தன. இந்நிலையில் மீண்டும் சென்னையில் பைக் ரேஸ் நிகழ்வுகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. நேற்று இரவு 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பேரதிர்ச்சி, பெரும் ஆபத்து; தமிழகப் பாலில் நச்சுப்பொருளா?- மு.க.ஸ்டாலின்!

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விஷயத்தில் போலீசார் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இன்று வெளுத்துக் கட்டும் கனமழை; எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

அடுத்த செய்தி