ஆப்நகரம்

கோவை அருகே டிரக்குகள் மோதி விபத்து; 60 அடி பாலத்தில் இருந்து விழுந்த பயங்கரம்!

டிரக்குகள் மோதிக் கொண்ட விபத்தில், ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TIMESOFINDIA.COM 15 May 2019, 3:43 pm
கோவை அருகே இருகூர் ரயில்வே மேம்பாலத்தில் நேற்று அதிகாலை இரு டிரக்குகள் மோதிக் கொண்டன. இதில் 60 அடி உயர பாலத்தில் இருந்து டிரக்குகள் கீழே விழுந்தன. இந்த விபத்தில் கேரள மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்த ஜெயஸ் சசிதரன்(30) உயிரிழந்தார்.
Samayam Tamil Accident


இவர் டிரக் கேபினுக்குள் சிக்கிக் கொண்டு, படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பேசிய போக்குவரத்து போலீசார், கேரளாவில் இருந்து சேலத்தில் வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, டிரக்கை ஜெயஸ் ஓட்டிச் சென்றுள்ளார்.

மற்றொரு டிரக் பழங்களுடன் பெங்களூருவில் இருந்து கோவை நோக்கி வந்தது. இந்நிலையில் இருகூர் மேம்பாலத்தில் வந்த போது, ஒரு டிரக் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் எதிர் திசையில் வந்த மற்றொரு டிரக் மீது பயங்கரமாக மோதியுள்ளார்.

இதையடுத்து இரு டிரக்குகள் பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளன. இந்நிலையில் டிரக் கேபினில் இருந்து ஜெயஸால் வெளியே வர முடியாமல், படுகாயமடைந்து உயிரிழந்தார். மற்றொரு டிரக் ஓட்டுநர் ராகவேந்திரா(21) காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவர் சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் என்று கூறினார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் உயிரிழந்தவரின் உடலை மீட்டு, கோவை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி