கோவையில் உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு குமாரபாளையம் நோக்கி ஆறுவழிச் சாலையில் உறவினர்களான 8 பெண்கள் சைலோ காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சிவகுமார் (51) என்பவர் ஓட்டிவந்துள்ளார். அவிநாசி பைபாஸ் சாலையில் கார் பயணித்து கொண்டிருந்தபோது, அதற்குமுன் கோவையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துவிட்டு ஈரோடு நோக்கி சென்றுகொண்டிருந்த சுமோ கார் திடீரென ட்ராக் மாறி சாலையை கடக்க முற்பட்டதால் சுமோ கார் மீது சைலோ கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சைலோ காரில் சென்ற 9 பேர் மற்றும் சுமோ காரில் சென்ற இருவர் என 11 பேருக்கு காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் அவிநாசி அரசு மருத்துவமனை மற்றும் திருமுருகன்பூண்டியில் தனியார் மருத்துவமனையிலும் முதலுதவியளிக்கப்பட்டது.
சென்னைக்கு அருகே உள்ள நான்கு சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றம்?
இதில் சைலோ காரில் வந்த நல்லாயம்மாள் (65) என்பவருக்கு பலமான காயம் ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு கோவைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதில் சைலோ காரில் சென்ற 9 பேர் மற்றும் சுமோ காரில் சென்ற இருவர் என 11 பேருக்கு காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் அவிநாசி அரசு மருத்துவமனை மற்றும் திருமுருகன்பூண்டியில் தனியார் மருத்துவமனையிலும் முதலுதவியளிக்கப்பட்டது.
சென்னைக்கு அருகே உள்ள நான்கு சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றம்?
இதில் சைலோ காரில் வந்த நல்லாயம்மாள் (65) என்பவருக்கு பலமான காயம் ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு கோவைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.