ஆப்நகரம்

கோவை வாளையார் சோதனைச் சாவடியில் 150 கிலோ குட்கா பறிமுதல்!!

கோவையில் உள்ள வாளையார் பகுதி சோதனைச் சாவடியில், சுமார் 150 கிலோ குட்கா பொருட்களை ஏற்றிவந்த வாகனத்தை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Samayam Tamil 25 Jul 2018, 4:06 pm
கோவையில் உள்ள வாளையார் பகுதி சோதனைச் சாவடியில், சுமார் 150 கிலோ குட்கா பொருட்களை ஏற்றிவந்த வாகனத்தை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
Samayam Tamil கோவை வாளையார் சோதனைச் சாவடியில் 150 கிலோ குட்கா பறிமுதல்!!
கோவை வாளையார் சோதனைச் சாவடியில் 150 கிலோ குட்கா பறிமுதல்!!


இந்த சமபவம் குறித்துத் தெரிவித்துள்ள உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி, டாக்டர். விஜயலலிதாம்பிகை, “வாளையார் சோதனைச் சாவடியில், குட்கா பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்றை சிறைப்பிடித்து வைத்துள்ளதாக அங்கிருந்த காவலர்கள் தகவல் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த நாங்கள், சுமார் 150 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தோம். இது தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

முதல் கட்ட விசாரணையில், இவை பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதை விற்பனை செய்தவர்கள் யார், இது யாருக்காக கொண்டு செல்லப்பட்டது உள்ளிட்ட தகவல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி