ஆப்நகரம்

கால்பந்தில் கலக்கும் கோவை சிறுவனுக்கு உதவ கோரிக்கை

கோவையைச் சேர்ந்த 18 வயது சிறுவன் பார்சிலோனா கால்பந்து கிளப்பில் பயிற்சி பெற நிதி உதவி அளிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 4 May 2018, 2:51 am
கோவையைச் சேர்ந்த 18 வயது சிறுவன் பார்சிலோனா கால்பந்து கிளப்பில் பயிற்சி பெற நிதி உதவி அளிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil wretr


கோவையைச் சேர்ந்த கோல் சிவகுமார் என்ற 18 வயது சிறுவன் கால்பந்தில் அரிதான திறமை கொண்டவர். இடதுகாலால் பந்தை எதிர்கொள்ளும் திறன் கொண்ட மிக அபூர்வமான வீரரான இவர் 21 வயதுக்கு உட்பட தேசிய அளவிலும் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் விளையாடியுள்ளார். கோவையின் 19 வயதுக்கு உட்பட கால்பந்து அணியின் கேப்டனாகவும் உள்ளார்.

இவருக்கு ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா கால்பந்து கிளப்பில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜூன் 10ஆம் தேதி ஸ்பெயினில் நடக்கும் தேர்வில் பங்கேற்கபதற்கு இவரிடம் போதிய பண வசதி இல்லை.

கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி போன்றவர்கள் விளையாடும் பார்சிலோனா கிளப்பில் விளையாடும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கோகுல் இணைதளம் வாயிலாக ரூ.3 லட்சம் நிதி உதவி கோரியுள்ளார்.

அடுத்த செய்தி