ஆப்நகரம்

கோவை முழுவதும் கள்ளநோட்டு பரவல்: சில்லறை கொடுத்தால் உஷார்!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பல கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 10 Mar 2021, 7:56 pm
கேரளாவைச் சேர்ந்த இருவர் கோவை பேருந்து நிலையத்தில் நேற்று இரவு உலாவிக் கொண்டிருந்தனர். அவர்கள் கையிலிருந்த 500 ரூபாயை எடுத்து பழக் கடையில் கொடுத்து பழங்கள் கேட்டனர்.
Samayam Tamil கோவை முழுவதும் கள்ளநோட்டு பரவல்: சில்லறை கொடுத்தால் உஷார்!


பழ வியாபாரி நோட்டைத் தொட்டுப் பார்த்த உடன் அது கள்ள நோட்டு என்பதை அறிந்து கொண்டு கோவை காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வருவதைக் கண்ட இரண்டு பேரில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்ட ஒருவரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரக்கு அடித்து வாகனம் ஓட்ட கோவை போலீசார் 2 ஆயிரம் லஞ்சம்: படம் எடுத்த விஜிலன்ஸ்!

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த முகம்மது ஜூனைத். வயது 24. இவரது நண்பர் பாசில். வயது 26. இருவரும் காஞ்சிபுரம் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள பழக்கடைக்குப் பழங்கள் வாங்க சென்றனர். போலீசார் விரைந்து சென்று கைது செய்தவர் முகம்மது ஜூனைத்.

அடுத்த செய்தி