ஆப்நகரம்

கோவையில் லாரி மோதி இருவர் உயிரிழப்பு!

கோவையில், ஒரே நேரத்தில் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது லாரி மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Samayam Tamil 16 Feb 2019, 4:09 pm
கோவையில், ஒரே நேரத்தில் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது லாரி மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Samayam Tamil accident-rep-image


சரக்கு லாரி ஒன்று திருச்சியிலுருந்து கோவையை நோக்கி நேற்று இரவு சென்றுகொண்டிருந்தது. அப்போது வாகன ஓட்டுநரின் கட்டுபாட்டை மீறி லாரி சென்றுள்ளது. என்ன செய்வது என்று தெரியாத வாகன ஓட்டுநர், லாரியை பாப்பம்பட்டி பிரிவு என்ற இடத்தில் திருப்பி உள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதே நேரத்தில் அந்த வழியாக வந்த ஆட்டோ மீதும் மோதியது. இதைத்தொடர்ந்து லாரி சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் உயிர்தப்பிய லாரி ஓட்டுநர் தப்பிச் சென்றுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நபருர் பரிதாபமாகஉயிரிழந்தனர். சம்பவயிடத்திற்கு வந்த சூலூர் காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி