ஆப்நகரம்

கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்த 2 சிறுமிகள்: மிரள வைத்த கதை!

கோவையைச் சேர்ந்த இரு சிறுமிகள் செய்த சாதனை கலாம் புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளது. இந்த சூழலில் சாதனை சிறுமிகளைக் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே. அர்ச்சுனன் சம்பந்தப்பட்டவர்களை நேரில் வரவழைத்து வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Samayam Tamil 25 Dec 2020, 6:29 pm
கோவை டவுன்ஹால் பகுதியைச் சேர்ந்தவர் கீதா. தட்டச்சில் ஆங்கில எழுத்துக்களை தலைகீழாக நான்கு நொடிகளில் அடித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் ஏசியன், கலாம் புக் ஆஃப் ரெக்கார்டுகளில் இடம் பிடித்து சாதனை செய்தவர்.
Samayam Tamil கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்த 2 சிறுமிகள்: மிரள வைத்த கதை!
கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்த 2 சிறுமிகள்: மிரள வைத்த கதை!


இந்த சூழலில் இவரது மூன்று வயது மகள் சன்சிதாஸ்ரீ பெரிய பலூனை 15 நொடிகளில் இடை விடாமல் ஊதி சாதனை புரிந்துள்ளார். இந்த சிறுமியின் சாதனையைப் பாராட்டி கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட் இவருக்குச் சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் இவர் 36 பகுதிகள் கொண்ட புதிர் விளையாட்டை 3 நிமிடங்களில் முடித்து மற்றொரு சாதனையையும் புரிந்துள்ளார்.

அதே போல் இவரது உறவினரான தீக்‌ஷிதா ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தீக்‌ஷிதா தனது வீட்டின் நான்கு அடி உயரமுள்ள ஜன்னலின் மீது ஏறித் தொடர்ந்து ஒரு மணி நேரம் குதித்து சாதனை படைத்துள்ளார். அதே போல் குறிப்பிட்ட பகுதியில் தீக்‌ஷிதா இடைவிடாமல் சைக்கிள் ஓட்டியும் சாதனை புரிந்துள்ளார்.

குறைவான விலையில் ஹெலிகாப்டர் டாக்சி சுற்றுலா!

இந்த இரு சிறுமிகளின் சாதனைகளைப் பாராட்டி கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்துள்ளது. இது தொடர்பான தகவல் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே. அர்ச்சுனனுக்குக் கிடைத்துள்ளது.

இதையடுத்து அர்ச்சுனன், சிறுமிகள் சன்சிதாவை மற்றும் தீக்‌ஷிதா ஆகியோர் நேரில் வரவழைத்து, அவர்களின் சாதனையைப் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார்.

அடுத்த செய்தி