குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் உடல்நலனுக்கு தீங்கு ஏற்படுத்துவதால் இந்தப் பொருட்களின் விற்பனைக்கு கடந்த 2010-ம் ஆண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையும் மீறி இந்த போதை பொருட்களை வெளி மாநிலங்களிலிருந்து பதுக்கி கொண்டு வந்து கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களின் அருகே சட்ட விரோதமாக விற்பனை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே கோவை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்பேரில் தேடுதல் வேட்டையானது தீவிரமாக நடந்து வருகிறது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்த நிலையில் தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதை பொருட்களை விற்பனை செய்வதாக பெரியநாயக்கன்பாளையம் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான குழு சம்பவ இடமான பன்னிமடை பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர்.
அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடையில் புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த பிரதீப் ராம் என்பவரது மகன் லட்சுமணன் (22), உக்சிங் என்பவரது மகன் மதன் சிங் (22), மற்றும் பாபுலால் என்பவரது மகன் இந்திரகுமார் (22) ஆகிய மூன்று நபர்களையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 224 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள்,மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து மூன்று நபர்களையும் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்த நிலையில் தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதை பொருட்களை விற்பனை செய்வதாக பெரியநாயக்கன்பாளையம் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான குழு சம்பவ இடமான பன்னிமடை பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர்.
அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடையில் புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த பிரதீப் ராம் என்பவரது மகன் லட்சுமணன் (22), உக்சிங் என்பவரது மகன் மதன் சிங் (22), மற்றும் பாபுலால் என்பவரது மகன் இந்திரகுமார் (22) ஆகிய மூன்று நபர்களையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 224 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள்,மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து மூன்று நபர்களையும் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.