ஆப்நகரம்

கர்த்தர் எதையும் சும்மா செய்ய மாட்டார்: பால் தினகரன் வீட்டில் 2வது நாள் ரெய்டு!

கோவையில் மதபோதகர் பால் தினகரனுக்குச் சொந்தமான காருண்யா பள்ளி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாம் நாளாகத் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Samayam Tamil 21 Jan 2021, 2:46 pm
கோவை மாவட்டம் சிறுவாணி சாலையில் உள்ள காருண்யா பல்கலைக்கழக வளாகத்திலும், லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் உள்ள காருண்யா கிறிஸ்டியன் ஸ்கூல் வளாகத்திலும் நேற்று காலை 7 மணி முதல் இரவு வரை சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாம் நாளாக இன்றும் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil கர்த்தர் எதையும் சும்மா செய்ய மாட்டார்: பால் தினகரன் வீட்டில் 2வது நாள் ரெய்டு!
கர்த்தர் எதையும் சும்மா செய்ய மாட்டார்: பால் தினகரன் வீட்டில் 2வது நாள் ரெய்டு!


சென்னை மற்றும் கோவை உட்படத் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பால் தினகரனின் “இயேசு அழைக்கிறார்” என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

மொத்தம் 28 இடங்களில் நடைபெறும் இந்த சோதனையில் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். வளாகத்தின் வாயில் கதவுகள் அடைக்கப்பட்டு சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது.

எஸ்ஐ வில்சன் கொலை... கோவையில் என்ஐஏ தீவிர சோதனை!

முறையாக வருமான வரி செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்ததாகக் கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

அடுத்த செய்தி