ஆப்நகரம்

கோவையில் பரபரப்பு: மெத்தம்பெட்டமைன் எனும் உயர் ரக போதை பொருள்... கல்லூரி மாணவர்கள் கைது!

மெத்தபெட்டமைன் எனும் உயர்ரக போதை பொருள் வைத்திருந்த 3 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1,80,000 ரூபாய் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Written byபிரபாகர் B | Samayam Tamil 18 May 2023, 5:15 pm

ஹைலைட்ஸ்:

  • கோவையில் உயர் ரக போதைப்பொருள் பறிமுதல்
  • கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
  • கல்லூரி மாணவர்களிடம் விற்று வந்தது அம்பலம்
  • கம்பி எண்ணும் கல்லூரி மாணவர்கள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil covai college students arrest
covai college students arrest
கோவை சூலூர், அடுத்த நீலாம்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உயர்ரக போதைப் பொருள்கள் மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கபெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலிசார் நீலாம்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
வசமாக சிக்கிய இளைஞர்கள்

அப்போது சந்தேகத்துக்கு இடமான 2 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை கொண்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களது உடைமைகளை சோதித்தபோது, அதில் சந்தேகத்துக்கிடமான வகையில் வெள்ளை நிற பொட்டலம் ஒன்று இருந்தது. இது குறித்து இளைஞர்களிடம் கேட்டபோது பதில் அளிக்காமல் இருந்தனர்.
கோவை: காஸ்ட்லி பூனை கடத்தல்... சல்லடை போட்டு தேடும் சரவணம்பட்டி போலீஸ்!
காவல்நிலையத்தில் விசாரணை

இதையடுத்து மூவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் இளைஞர்கள் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த நந்தகிருஷ்ணா மற்றும் வருண் என்பதும், நவ இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது.

உயர் ரக போதைப்பொருள்

covai drugs


இதனை கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் மெத்தபெட்டமைன் வாங்க உதவிய முகமது அஷ்ரத் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 60 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட
மெத்தம்பெட்டமைனின்(methamphetamine ) மதிப்பு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என போலிசார் தெரிவித்துள்ளனர். உயர் ரக போதை பொருள் வைத்திருந்ததால் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி