ஆப்நகரம்

Coimbatore: தடுப்பூசி போட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்த 3மாத குழந்தை

தடுப்பூசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே குழந்தை உயிரிழந்தது.

Samayam Tamil 18 Feb 2021, 10:51 am
கோவை மாவட்டம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 3 மாதக் குழந்தை உயிரிழந்ததையடுத்து தடுப்பூசிதான் காரணமா என்று கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி பெற்றோர்கள் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
Samayam Tamil covid vaccine


கோவை மசகாலிபாளையம் அருகே உள்ள சுப்பண்ணா வீதியை சேர்ந்தவர் பிரசாத்.‌ கூலி தொழிலாளி. இவர் மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு கிஷாந்த் என்ற மூன்று மாத ஆண் குழந்தை இருந்தது.

அடுத்த 100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சிதான்... எப்படி? அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

நேற்று குழந்தைக்கு அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் வைரஸ் நோயை தடுப்பதற்கான ஊசி போடப்பட்டது. சுகாதாரத் துறை மூலமாக முகாம் நடத்தப்பட்டு இந்த தடுப்பூசி போடப்பட்டதாக தெரியவந்துள்ளது. தடுப்பூசி போட்ட சிறிது நேரத்தில் குழந்தை கிஷாந்த் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தான். பால் குடிக்கவும் மறுத்துவிட்டான்.

இதைத் தொடர்ந்து விஜயலட்சுமி குழந்தைக்கு சுகாதாரத்துறையினர் வழங்கிய சொட்டு மருந்து நான்கு சொட்டு கொடுத்தார். இதை குடித்த பின் குழந்தை கிஷாந்த் பேச்சு மூச்சின்றி மயங்கினான். அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி மற்றும் அவரது கணவர் குழந்தையைத் தூக்கிக்கொண்டே மசக்காளிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர்.

டாக்டர்கள் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார். மருத்துவமனைக்கு செல்லும் போது வழியில் குழந்தை பரிதாபமாக இறந்து விட்டான். குழந்தைக்கு சளி மற்றும் மூச்சு விடுவதில் பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த நேரத்தில் தடுப்பூசி போட்டதும் குழந்தைக்கு பாதிப்பு அதிகமாகி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சுகாதாரத் துறையினர் கருதுகின்றனர். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே சமயம் குழந்தைக்கு ஏற்கனவே சளி காய்ச்சல் இருந்ததாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து, சளி காய்ச்சல் காரணமாகவே குழந்தை இறந்திருக்கக் கூடும் என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

முழுமையான ஆய்வுக்குப் பின்னரே இறப்புக்குக் காரணம் எதுவென்று தெரிய வரும் என்பதால், மருத்துவமனையில் பரபரப்பும் கொரோனா தடுப்பூசி குறித்த குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி