ஆப்நகரம்

கோவை: ஸ்மார்ட் சிட்டி அலங்கார விளக்கு வெடித்து 4 பேர் காயம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பந்தைய சாலையில் அமைக்கபட்டு வரும் அலங்கார விளக்கு வெடித்ததில் நான்கு பேர் காயம்.

Samayam Tamil 8 Mar 2021, 11:35 pm
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் கோவையில் மேற்கொள்ளாபட்டு வருகிறது.குளங்கள் சீரமைக்கபட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த சில தினங்களுக்கு முன் மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்தார்.இந்த பணிகளின் ஒரு பகுதியாக பந்தய சாலையில் புனரமைப்பு பணிகளை 40.70 கோடி ரூபாயில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் துவக்கி வைத்தார்.
Samayam Tamil smart city


சிந்தடிக் தரைதளம்,உணவகங்கள், குழந்தைகள் விளையாட்டு பூங்கா,கண்காணிப்பு கேமரா என பல நவீன அம்சங்களுடன் இதன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று மாலை அமைக்கபட்டு வந்த அலங்கார மின்விளக்குகளில் ஒன்று வெடித்து சிதறியது.

இதில் அங்கு பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது.இதில் கண்ணாடி துகள்கள் சிதறி நடைபாதை பயிற்சி மேற்கொண்ட சிலர் மீது விழுந்தது.

எடப்பாடி சொன்ன மகளிர் தின ஹேப்பி நியூஸ்... குடும்பத் தலைவிகளுக்கு மாசத்துக்கு 1,500 ரூபாய்!

அதிர்ஷடவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து அங்கு வந்த மாநகராட்சி பணியாளரகள் வெடித்த அலங்கார விளக்கு மற்றும் சிதறிய துகள்களை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்தின் அருகே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள பணிகளில் தரமற்ற பொருட்களை உபயோகிப்பதாகவும் இது தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டங்களை திமுக நடத்தி உள்ளது என தெரிவித்தார்.

அடுத்த செய்தி