ஆப்நகரம்

விண்கற்கள் குறித்து சர்வதேச ஆய்வுக்குக் கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் தேர்வு!

சர்வதேச விண்கற்கள் கண்டறிதல்(Asteroid Search Campaign) ஆய்விற்கு எஸ்என்எம்வி தனியார்க் கல்லூரி இயற்பியல் துறை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 6 Aug 2021, 8:01 am
சர்வதேச விண்வெளி ஆய்வு அமைப்பு(INTERNATIONAL ASTRONOMICAL SEARCH COLLABORATION-IASC) புதிய விண்கற்களைக் கண்டறியும்(Asteroid Search Campaign) ஆய்வினை நடத்தி வருகிறது.
Samayam Tamil விண்கற்கள் குறித்து சர்வதேச ஆய்வுக்குக் கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் தேர்வு!


இந்த ஆய்வில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த விண்வெளி ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் பங்கேற்று புதிய விண்கற்களைக் கண்டறிந்து வருகின்றனர்.

இந்த சூழலில் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும் ஆய்விற்கு இந்தியாவிலிருந்து 20 ஆய்வுக் குழுக்கள் தேர்வாகி உள்ளன. தமிழ்நாட்டிலிருந்து கோவை எஸ்என்எம்வி தனியார் கல்லூரி இயற்பியல் துறை மாணவர்கள் ஜி கிருத்திகா கிருஷ்ணன், ஆர் மோனிஷ் குமார், பி அபிநயா,டி காயத்திரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இக்குழுவை Open Space Foundation-இன் தலைவர் சுரேந்தர் பொன்னழகர் ஒருங்கிணைக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து இவ்வாண்டில் தேர்வு செய்யப்பட ஒரே ஆய்வுக்குழு என்ற பெருமையைக் குறிப்பிட்ட கல்லூரி மாணவர்கள் பெற்றுள்ளனர்.

ரூ 35 ஆயிரத்துடன் விபத்தில் சிக்கி மயங்கியவரை மீட்ட 108 ஆம்புலன்ஸ் கோவை ஊழியர்கள்!
இந்த திட்டத்தின் வழியாகச் சர்வதேச அளவில் விண்கற்களைக் கண்டறிந்து, அவற்றை வகைப்படுத்துவதை ஐஎஸ்ஏசி செய்து வருகிறது. இவ்விண்கற்கள் கண்டறிதல் குறித்த ஆய்வுத்திட்டம் அமெரிக்க நாட்டின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் உதவியோடு CITIZEN SCIENTIST RESEARCH திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது .

இப்படி எடுக்கப்படும் படங்களைக் கொண்டு ஒரு பிரத்தியேக மென்பொருள் உதவியுடன் விண்கற்களைக் கண்டறிவது இவ்வாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் பணியாகும்.

அடுத்த செய்தி