ஆப்நகரம்

கோவையில் சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கி 4 வயது சிறுவன் மரணம்..!

கோவை அருகே சிக்கன் துண்டு தொன்டையில் சிக்கிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 31 Jul 2020, 2:12 pm
கோவை மல்லிகா நகர் தொண்டாமுத்தூர் பகுதியில் வசித்து வருபவர் காமாட்சி (30). இவரது மனைவி பின்கி(28). இவர்களுக்கு நான்கு வயதில் கபிலேஷ் என்ற மகன் உள்ளான். கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி பின்கி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு வடவள்ளியைச் சேர்ந்த லிங்கேஷ என்பவருடன் வேம்பு அவன்யூ பகுதியில் மகனுடன் வசித்து வருகிறார்.
Samayam Tamil died baby


இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் சிக்கன் எடுத்து சமைத்து சாப்பிட்டனர். அப்போது குழந்தைக்கு சிக்கன் துண்டுகளை கொடுத்துள்ளனர். அது தொண்டையில் சிக்கி குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுரைத்துயுள்ளனர்.

அங்கு சென்று சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்து தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உடலை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வடவள்ளி காவல் நிலையத்தில் காமாட்சி புகார் கொடுத்தார்.

விசிலில் ஆபாச பட பிலிம் ரோல்: சிறுவர்கள் அதிர்ச்சி

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் உடலை தந்தையிடம் ஒப்படைத்தனர். 4 வயது குழந்தை சிக்கன் துண்டு சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி