ஆப்நகரம்

ஆடு மேய்க்கும் பாட்டியிடம் 5 1/2 சவரன் செயின் பறிப்பு: கோவையில் பகீர் சம்பவம்!

கோவை தொண்டாமுத்தூர் அருகே ஆடு மேய்க்க சென்ற மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 சவரன் செயினை பறித்துச் சென்ற பெண் உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Curated bySrini Vasan | Samayam Tamil 29 Apr 2022, 10:53 am

ஹைலைட்ஸ்:

  • ஆடு மேய்க்க சென்ற மூதாட்டியிடம் 5 1/2 சவரன் செயின் பறிப்பு
  • தப்பிச்சென்ற பெண் உட்பட இருவருக்கு போலீஸ் வலை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil செயின் பறிப்பு
கோவை தொண்டாமுத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன், இவரது மனைவி காளியம்மாள் (65). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்தமகன் திருமணம் முடிந்து தனியாக உள்ள நிலையில் தனது இளைய மகனுடன் காளியம்மாள் வசித்து வருகிறார்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்

இந்நிலையில் தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள சுடுகாட்டில் காளியம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் மற்றும் பெண் இருவரும் பத்து நிமிடங்களாக அதே இடத்தில் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அங்கு வந்த அந்தப் பெண் காளியம்மாளிடம் இந்த பகுதியில் உள்ள கோவில் குறித்து பேச்சுக் கொடுத்துள்ளார். அப்போது அந்த பெண்ணுடன் வந்த ஆண் காளியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 5 1/2 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு, இருவரும் வந்த இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர்.

டிஜிபி சைலேந்திர பாபு பேச்சுக்கும் மதிப்பில்ல... கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் மோதிக் கொள்ளும் வீடியோ வைரல்!
சம்பவம் தொடர்பாக காளியம்மாள் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பிச்சென்ற அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி