ஆப்நகரம்

கைப்பையில் கிடந்த 6 நாள் வயது பச்சிளம் குழந்தை சடலம்: கோவை போலீஸ் விசாரணை!

சாலை ஓரத்தில் கிடந்த கைப்பையில் பிறந்து 6 நாட்கள் மட்டுமே ஆன குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Samayam Tamil 30 Dec 2020, 4:17 pm
சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலை, கருமத்தம் பட்டி அருகே உள்ள தென்னம்பாளையும் சர்வீஸ் சாலையில் கேட்பாரற்று ஒரு கை பை கிடந்தது. வெகு நேரமாகப் பையைத் தேடி யாரும் வரவில்லை.
Samayam Tamil கைப்பையில் கிடந்த 6 நாள் வயது பச்சிளம் குழந்தை சடலம்: கோவை போலீஸ் விசாரணை!
கைப்பையில் கிடந்த 6 நாள் வயது பச்சிளம் குழந்தை சடலம்: கோவை போலீஸ் விசாரணை!


அந்த பையில் எதோ கிடப்பது போல் இருந்தது. இதையடுத்து அந்த வழியாகச் சென்றவர்கள் குறிப்பிட்ட கைப் பையைத் திறந்து பார்த்தனர். அப்போது அதில் பச்சிளம் ஆண் குழந்தை சடலமாகக் கிடந்துள்ளது.

அதிர்ந்துபோன மக்கள், பச்சிளம் குழந்தையின் சடலம் குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கத்திமுனையில் பணம் பறிப்பு...இந்து அமைப்பு வாலிபர் மீது வழக்கு!

அரசு மருத்துவர்கள் குறிப்பிட்ட குழந்தையின் சடலத்தைப் பரிசோதித்ததில், குழந்தை பிறந்து 6 நாட்கள் மட்டுமே ஆகிறது என்பது கண்டறியப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் சடலத்தை வீசிச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அடுத்த செய்தி