ஆப்நகரம்

தெருவில் நினைவில்லாமல் தவித்த 87 வயது பாட்டி: மீட்டெடுத்தது மனிதம்...

காணாமல் போன 87 வயது மூதாட்டியை மீண்டும் குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த அறக்கட்டளைக்கு மூதாட்டியின் குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Samayam Tamil 12 Nov 2020, 10:13 pm
கடந்த 29ஆம் தேதி சாலையோரமாக ஆதரவற்ற நிலையிலிருந்த பத்மாவதி(87) என்ற மூதாட்டி ஈரநெஞ்சம் அறக்கட்டளை உதவியுடன், கோவையைச் சேர்ந்த மக்கள் மீட்டுள்ளனர். மூதாட்டி காப்பகத்தில் வைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டார்.
Samayam Tamil தெருவில் நினைவில்லாமல் தவித்த 87 வயது பாட்டி: மீட்டெடுத்தது மனிதம்...
தெருவில் நினைவில்லாமல் தவித்த 87 வயது பாட்டி: மீட்டெடுத்தது மனிதம்...


காப்பகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியிடம் விசாரித்ததில் அவருக்குச் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மூதாட்டிக்குத் தனது பெயரைத் தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை. தொடர்ந்து பாட்டியின் உறவினர்களைத் தேடும் முயற்சியை ஈரநெஞ்சம் அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது.

கோவை விமான நிலையத்தில் ரூ. ஒரு கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்!

அதன் பலனாக வியாழக் கிழமை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பாட்டி பத்மாவதியின் மகன் அனந்தராமன் என்பவர் தனது தாய் பத்மாவதியைக் காணவில்லை எனப் புகார் கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து, ராமநாதபுரம் காவல்நிலைய ஆய்வாளர் முருகேசன் அனுமதியுடன் மூதாட்டி பத்மாவதியை அவரது மகன் அனந்தராமனுடன் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த மனிதநேய நிகழ்வு அனைவர் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி