ஆப்நகரம்

BuildMat 2019: கோவையில் பில்ட்மேட் சர்வதேச கண்காட்சி: வரும் 14ம் தேதி தொடக்கம்!

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பில்ட்மேட் சர்வதேச கண்காட்சி வரும் 14 ந் தேதி கோவை கொடிசியா அரங்கில் நடைபெற உள்ளது.

Samayam Tamil 12 Feb 2019, 6:27 pm
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பில்ட்மேட் சர்வதேச கண்காட்சி வரும் 14 ந் தேதி கோவை கொடிசியா அரங்கில் நடைபெற உள்ளது.
Samayam Tamil build


கோவையில் ஒன்பதாவது பதிப்பாக 'பில்ட்மேட் 2019' எனும் சர்வதேச கட்டுமான கண்காட்சி வரும் 14ந் தேதி துவங்க உள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கண்காட்சி நிர்வாகிகள், 4 நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் குறைவான விலையில் அனைவருக்கும் வீடு என்ற பிரதமரின் கனவுத் திட்டத்தை முக்கிய நோக்கமாகக் கொண்டு, பிரத்யேகமாக ஒரு அரங்கை ஒதுக்கி உள்ளதாகவும், இந்த கண்காட்சியில், புதிய கட்டுமானப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு, சுற்றுச்சூழலைக் காக்கும், மழைநீரை சேகரிக்கும் கட்டுமானத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிவித்தனர்.

மேலும் கட்டுமான வல்லுனர்கள் மற்றும் பொறியியல் வல்லுனர்களைக் கொண்டு பல்வேறு கருத்தரங்குகள் கண்காட்சி அரங்கில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி