ஆப்நகரம்

காதல் ஜோடியின் கோலம்; ரயில் பயணிகள் அதிர்ச்சி

கோவை இருகூர் அருகே ரயில் தண்டவாளத்தில் காதல் ஜோடி இருந்த கோலத்தை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Samayam Tamil 19 Apr 2021, 10:23 am
கோவை இருகூர் அருகே இன்று அதிகாலை 4.30 மணி அளவில் தண்டவாளம் பகுதியில் பயணிகள் சிலர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது மனித உடல்கள் சிதறிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
Samayam Tamil கோயம்புத்தூர் ரயில் நிலையம்
கோயம்புத்தூர் ரயில் நிலைய படம்


இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இன்று அதிகாலை காதல் ஜோடி ஒன்று இருகூர் வழியாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

கோயில் கிணற்றில் எண்ணெய்; பக்தர்கள் பரவசம்

இதனை தொடர்ந்து காதல் ஜோடியின் சடலங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி