ஆப்நகரம்

மதுபோதையால் ஏற்பட்ட கொலை

கோயமுத்தூரில் மதுபோதையில் இரு நண்பர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டு ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 Feb 2019, 10:21 pm
கோயமுத்தூரில் 22 வயது வாலிபர் தன் நண்பரை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பெயர் முஜுபூர் ரகுமான். இவர் ஈச்சனாரியைச் சேர்ந்தவர். இவரது நண்பர் எஸ். பிஜி என்ற ஊட்டியைச் சேர்ந்த 21 வயது நபரை கொலை செய்துள்ளார்.
Samayam Tamil knife

சம்பவம் நடந்த அன்று இருவரும் மது அருந்திவிட்டு இலக்கில்லாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தனர்.

மதுக்கரை அருகே வண்டியை நிறுத்தினர். பிஜி பாக்கெட்டிலிருந்து ரகுமான் பணம் எடுக்க முயல, இருவருக்கும் கைகலப்பு உண்டானது. பிஜி தலையில் ரகுமான் இரும்பு கம்பி கொண்டு அடித்தார். இதனால் பிஜிக்கு பலத்த காயம் ஏற்படுத்துள்ளது. அருகில் இருந்த பொதுமக்கள் பிஜியை மருத்துவமனை அழைத்துச் சென்றனர். சிகிச்சை பலனின்றி
உயிரிந்தார். இதனையடுத்து ரகுமான் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி