ஆப்நகரம்

இஸ்லாமியர் என்பதால் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததா தனியார் மருத்துவமனை?

இஸ்லாமியர் என்பதால், கோவையில் உள்ள பிரபவ தனியார் மருத்துவமனையில் தமது மனைவிக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

Samayam Tamil 2 May 2020, 1:17 am
கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், இஸ்லாமியர் என்பதால் தனது மனைவிக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதாகவும், இதனால் கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் கூறி நபர் ஒருவர் பேசும் வாட்ஸ் அப் வீடியோ வைரலானது. அதில் மருத்துவமனை ஊழியர்களுடன் பாதிக்கப்பட்ட நபர் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
Samayam Tamil private hospital


இஸ்லாமியர் என்பதால் கர்ப்பிணி பெண்ணிற்கு சிகிச்சை மறுக்கப்பட்டதாக அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட இளைஞர் குற்றச்சாட்டி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தும்படி சுகாதாரத் துறை இணை இயக்குனருக்கு உத்தரவிட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.

கர்ப்பிணி பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறு எனவும் , பெண்ணிற்கு காய்ச்சல் இருந்ததால் அவர்களை இ.எஸ்.ஐ மருத்துவமனை அல்லது வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க சொன்னதாகவும் சம்பந்தப்பட்ட .மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்தது.

கோவை மாவட்டத்துக்குள் வருபவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கண்டிஷன்!

இந்நிலையில், அந்த மருத்துவமனை நிர்வாகம் மீது தமுமுக அமைப்பினர், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் முகமது ஆசிக்கை அழைத்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முகமது ஆசிப், " தனது மனைவி மஹ்தியா, வயிற்று வலியால் துடித்ததால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும், காய்ச்சல் இருக்கிறதா என சோதித்த பின் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்தனர். அங்கு ட்ரீட்மென்ட் பார்க்க முடியாது என்று சொன்னதால் வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். வேறு தனியார் மருத்துவமனையில் உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது.

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட 'ஸ்பெஷல் இட்லி' : கோவையில் நாளை அறிமுகம்!!

ஆனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தாமதமானதால் மனைவிக்கு அபார்ஷன் ஆனது.. இந்த நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக புகார் செய்துள்ளேன். மருத்துவம் பார்ப்பதற்கு மதம் தடையாக இருக்க கூடாது. என் மனைவிிக்கு காய்ச்சல் எனச் சொல்லி, கே.ஜி. மருத்துவமனை நிர்வாகம் பிரச்னையை திசைதிருப்ப பார்க்கிறது" என்று ஆசிப் கூறினார்.

அடுத்த செய்தி