ஆப்நகரம்

சின்னதம்பியை தேடி அழையும் தாய் மற்றும் குட்டி யானை!

கோயம்புத்தூரில் கும்கி யானையின் உதவியுடன் வனத்துறையினர் பிடித்துச் சென்ற சின்னதம்பி யானையைத் தேடி தாய் மற்றும் அதன் குட்டியானை அப்பகுதியில் சுற்றி திரியும் காட்சி காண்போரை கண்கலங்கச் செய்கிறது.

Samayam Tamil 28 Jan 2019, 10:07 am
கோயம்புத்தூரில் கும்கி யானையின் உதவியுடன் வனத்துறையினர் பிடித்துச் சென்ற சின்னதம்பி யானையைத் தேடி தாய் மற்றும் அதன் குட்டியானை அப்பகுதியில் சுற்றி திரியும் காட்சி காண்போரை கண்கலங்கச் செய்கிறது.
Samayam Tamil chinna


கோயம்புத்தூர் மாவட்டம் சோமையனூரில் விவசாய நிலங்களை சேதப்படுத்தியாக கூறப்பட்ட சின்னதம்பி என்ற காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டது தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, சின்னதம்பியை கும்கி யானையின் உதவியுடன் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.



இதில், பிடிபட்ட சின்னதம்பி யானையை வனத்துறையினர், தடாகம் பகுதியில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு சென்றனர்.

Also Read This: காட்டு யானை ’சின்னதம்பி’ பிடிபட்டு, லாரியில் ஏற்றப்பட்ட வீடியோ

இந்த நிலையில், ஏற்கனவே சின்னதம்பியின் கூட்டாளி விநாயகன் யானை பிடிபட்ட நிலையில், தற்போது சின்னதம்பி யானையும் பிடிபட்ட காட்சி தாய் மற்றும் அதன் குட்டியானைக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் சின்னதம்பி யானை சுற்றித்திரிந்த பகுதிகளுக்கு எல்லாம் இந்த இரு யானைகளும் சுற்றித்திரியும் காட்சி காண்போரை கண்கலங்கச் செய்கிறது.

மேலும், கணுவாய், வரப்பாளையம், பன்னீமடை போன்ற பகுதிகளில் இரு யானைகளும் சுற்றி வருகின்றன என்று வனத்துறையினர் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி