ஆப்நகரம்

இரயில் நிலைய கண்காணிப்பாளரே இரயில் முன் பாய்ந்து தற்கொலை

உடுமலை அருகே மைவாடியில் இரயில்நிலைய கண்காணிப்பாளர் கண்ணன் இரயில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Samayam Tamil 20 Apr 2019, 9:09 am
உடுமலை அருகே மைவாடியில் இரயில்நிலைய கண்காணிப்பாளர் கண்ணன் இரயில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
Samayam Tamil suicide


திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது மைவாடிரோடு இரயில் நிலையம் இந்த இரயில் நிலையத்தில் இரயில் நிலைய கண்காணிப்பாளரராக கண்ணன் (57) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று வழக்கம்போல் பணிக்கு வந்திருந்த கண்ணன் திருச்செந்தூர்-பாலக்காடு இரயில் வரும்போது தண்டபாலத்திற்க்கு வந்துநின்ற கண்ணன் யாரும் எதிர்பார்க்காத வேளையில் இரயில்தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

அதனை பார்த்த அங்குள்ள பணியாளர்கள் பதறியடித்து வருவதற்குள் கண்ணனின் உடல் நசுங்கியது.

இரயிவே ஊழியர்கள் இரயில்வேதுறை உயரதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் தண்டவாளத்தில் உள்ள உடலை கைப்பற்றி உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

மேலும் கண்ணன் குடும்பபிரச்சனைகாரனமாகதற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என இரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரயில் நிலைய கண்கானிப்பாளரே இரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி