ஆப்நகரம்

Ttf Vasan: என் பவர் தெரியாம விளையாடுறீங்க- வாண்டடா வந்து வண்டியில் ஏறிய TTF வாசன்!

நியூஸ் சேனல்கள் டிடிஎப். வாசன் பவர் தெரியாமல் விளையாடுகிறது என கேட்க வேண்டும் என டிடிஎப் வாசன் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. நியூஸ் சேனல்களை பார்த்து பயம் கிடையாது. யாரை பார்த்தும் பயம் கிடையாது. அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு. அதை கடந்து போகிறீர்கள். அதற்குமேல் போனால், நங்கள் அனைத்து யூ டியூபர்ஸ் சேர்ந்து நீங்கள் செய்தவற்றை பற்றி பேச வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கும் தொனியில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 29 Sep 2022, 4:48 pm

ஹைலைட்ஸ்:

  • நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்ற டிடிஎப். வாசன்
  • யாரை பார்த்தும் பயம் கிடையாது என டிடிஎப். வாசன் பேசிய வீடியோ
  • நியூஸ் சேனல்களை எச்சரிக்கும் தொனியில் வீடியோ வெளியிட்டுள்ளார்


ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம்,உடன்குடியைச் சேர்ந்த மரக்கடை அதிபரும், பிரபல யூட்யூபருமான ஜி.பி.முத்துவை சந்தித்த டிடிஎப் வாசன், அவரை பைக்கில் அமர வைத்து அதிவேகமாக பைக்கை ஓட்டியுள்ளார். அப்போது ரைடுக்கு கிளம்பும் முன் வாசனின் பைக்கை பார்த்து ஜி.பி.முத்து இதில் பிடிமானம் கூட இல்லையே என தெரிவிக்க, என்னை பிடித்துக் கொள்ளுங்கள் என டி.டி எப் வாசன் கூறுகிறார்.

பின்னர் இருவரும் நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பியதாக தெரிவித்து கன்னத்தில் முத்தமிட்டு கொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து 20 கி.மீ. தூரத்தை பைக்கில் செல்ல முடிவு செய்கின்றனர். டி.டி.எப்.வாசன் பைக்கில் ஏற முடியாமல் ஏறும் ஜி.பி.முத்து தனக்கு வேகமாக போக பிடிக்காது என தெரிவிக்கிறார்.


ஆனால் அதைக் கேட்காமல் வாகன நெருக்கடி நிறைந்த சாலையில் 150 கி.மீ.க்கு மேலான வேகத்தில் செல்லும் டிடிஎப் வாசன், ஜி.பி.முத்துவுக்கு மரண பயத்தை காட்டுகிறார். இதனால் கதறுவதை காமெடியாக டிடிஎப் வாசன் எடுத்துக் கொள்கிறார்.

எதிர்திசையில் வாகனங்கள் வரும் நிலையில் கையை விட்டு வேகமாக ஓட்டும் நிலையில் ஜி.பி.முத்து ஹெல்மெட் கூட அணியாமல் பின்னால் அமர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் டிடிஎப் வாசன் பிரபல யூடியூபர் ஜி.பி.முத்துவை பைக்கில் அமர வைத்து கோவை - பாலக்காடு சாலையில் அசுர வேகத்தில் இயக்கி அவருக்கு பயத்தை காட்டிய வீடியோ வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து டிடிஎப் வாசன் மீது போத்தனூர் காவல் துறையினர் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும், டிடிஎப் வாசன் மீது சூலூர் காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் டிடிஎப். வாசனை தேடி வந்த நிலையில், மதுக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பு அவர் சரணடைந்தார். இதனையடுத்து காலை 10.30 மணிக்கு சரணடைந்த வாசன் மாலை 5.30 வரை நீதிமன்ற கூண்டில் அமர்ந்திருந்தார்.

உடுமலை: அரசு பஸ் பள்ளத்தில் தலைகீழ் கவிழ்ந்து விபத்து.. அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

இரண்டு நபர்களின் உத்தரவாதம் கொடுத்த பின் மாலையில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். போத்தனூர் வழக்கில் சரணடைந்த நிலையில், சூலூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் வருகின்ற வெள்ளிக்கிழமை டிடிஎப். வாசன் ஆஜராக இருப்பதாக காவல் துறை வட்டாரம் தகவல் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது டிடிஎப். வாசன், நியூஸ் சேனல்களை எச்சரிக்கும் தொனியில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில்; நியூஸ் சேனல்கள் டிடிஎப். வாசன் பவர் தெரியாமல் விளையாடுகிறது என கேட்க வேண்டும் என தோன்றுகிறது. ஆனால் வேணாம். சுமூகமா போய்விடலாம் என நினைக்கிறன்.

"அவதூறு அண்ணாமலை" IPS படித்தவர் செய்யும் செயலா இது?- துரை வைகோ ஆவேசம்!

நியூஸ் சேனல்களை பார்த்து பயம் கிடையாது. யாரை பார்த்தும் பயம் கிடையாது. அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு. அதை கடந்து போகிறீர்கள். அதற்குமேல் போனால், நங்கள் அனைத்து யூ டியூபர்ஸ் சேர்ந்து நீங்கள் செய்தவற்றை பற்றி பேச வேண்டிய நிலை ஏற்படும்.

“என்ன பயம் காட்டுறியா” எனக்கேட்டால், அதெல்லாம் யில்லை. அனைத்து யூ டியூபர்ஸ் நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். இவர்கள் “மதன் ஒ பி, இப்ரான் அனைவரையும் வச்சு செஞ்சாங்க, அது போல என்னையும் வச்சு செஞ்சுட்டாக”. நாளைக்கு உங்களுக்கும் இந்த நிலை வரலாம்.

நாம் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளோம். நம்மை பற்றி ஏதாவது செய்தி போட்டால், அவர்களுக்கு வியூஸ் வரும் என்ற கேவலமான நோக்கத்தில் இதை செய்கிறார்கள் என்று வாசன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி