ஆப்நகரம்

சிறுமிக்கு திருமண ஆசைகாட்டி கடத்திய இளைஞர் கைது!!

கோவையில் 16 வயது சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்திச் சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Samayam Tamil 30 Jun 2020, 11:57 pm
கோவை குனியமுத்தூர் காவல் நிலைய பகுதியில் வசித்துவரும் 16 வயது சிறுமி மாயமானதாக, கடந்த 28 ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
Samayam Tamil youth


இந்த நிலையில், மாயமான சிறுமியும், கோவை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹர்ஷாத் என்ற இளைஞரும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்த விசாரணையில் ஹர்ஷாத், 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி கடத்திச் சென்று, கோவையில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது.

விவாகரத்து ஆன பெண்ணுடன் காதலாம்..! '96' ஸ்டைலில் நாமம் போட்ட வாலிபர்...

இதனை அடுத்து ஹர்ஷாத்தை கைது செய்த போலீசார், அந்த வாலிபரிடம் இருந்து சிறுமியை பத்திரமாக மீட்டனர். மேலும் ஹர்ஷாத் மீது கடத்தல் மற்றும் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி