ஆப்நகரம்

மீண்டும் போர் விமானத்தை இயக்குவாரா? மாட்டாரா? அபிநந்தன் குறித்து படைத் தளபதி முக்கியத் தகவல்!

அபிநந்தன் மீண்டும் பணிக்கு திரும்புவாரா என்பது குறித்து, விமானப் படை தளபதி பிரேந்தர் சிங் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.

TIMESOFINDIA.COM 4 Mar 2019, 3:21 pm
கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படையின் தளபதி பிரேந்தர் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், விங் கமாண்டர் அபிநந்தன் முழு தகுதி பெற்றால், தனது படைப்பிரிவிற்கு திரும்புவார்.
Samayam Tamil Birender Singh


ஒருவேளை அவர் உடல் தகுதி பெறவில்லை எனில், அதற்காக கால அவகாசம் அளிக்கப்படும். பின்னர் முழு உடல் தகுதி பெற்ற பின்னரே பணியில் அமர்த்தப்படுவார். அவர் பணியாற்றிய அதே படைப்பிரிவில் தான் வேலை செய்வார்.

தற்போதைய சூழல் காரணமாக, வேறு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட மாட்டார். விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே விழுந்ததால், அவரது உடலில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. அதற்கு உரிய சிகிச்சை மற்றும் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இல்லையெனில் வாழ்நாள் முழுவதும் வீல் சேரில் அமர வேண்டிய சூழல் கூட ஏற்படலாம் என்று கூறினார். பாகிஸ்தானில் இருந்து திரும்பிய அபிநந்தன், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அங்கு பல்வேறு உடல்நலப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்னும் 10 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. முன்னதாக நடத்தப்பட்ட சோதனையில் அவரது உடலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எந்தவித சிப்களையோ, ஒட்டுக் கேட்கும் கருவிகளையோ பொருத்தவில்லை என்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அவரைச் சந்திக்க சென்ற விமானப்படை அதிகாரிகளிடம், தான் விரைவில் பணிக்கு திரும்ப வேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளார்.

அடுத்த செய்தி