கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள ராமப்பா ரோட்டில் கடந்த ஒரு வாரமாக நகராட்சி தெரு விளக்கு எரியவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது.
தெரு விளக்கைச் சீரமைத்துத் தரும்படி நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் சாலை மின் விளக்கைச் சீரமைத்துத் தர வலியுறுத்தி தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தினர் குறிப்பிட்ட பகுதியில் உள்ள தெருவிளக்குகளைச் சரி செய்து மக்களுக்கான வெளிச்சத்தைக் கொடுத்தனர். இந்த பணியை அதிகாரிகள் சரிசெய்து கொடுக்க 10 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.
இதேபோல் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 29ஆவது வார்டு நடூர் பகுதி முனியப்பன் கோவில் வீதி மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 32ஆவது வார்டு அம்மன் நகர், அன்னை நகர் 5 வார்டுக்கு உட்பட்ட சீரங்கராயன் ஓடை, வெள்ளிபாளையம் ரோடு உள்ளிட்ட மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் உள்ள பழுதான தெருவிளக்குகளைச் சரி செய்து தரவேண்டும் என சிஐடியு கோரிக்கை வைத்துள்ளது.
தெருவிளக்குகளைச் சரி செய்யாவிட்டால் பகுதி மக்களைத் திரட்டி தீப்பந்தம் ஏந்தி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என சிஐடியு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெரு விளக்கைச் சீரமைத்துத் தரும்படி நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் சாலை மின் விளக்கைச் சீரமைத்துத் தர வலியுறுத்தி தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தினர் குறிப்பிட்ட பகுதியில் உள்ள தெருவிளக்குகளைச் சரி செய்து மக்களுக்கான வெளிச்சத்தைக் கொடுத்தனர். இந்த பணியை அதிகாரிகள் சரிசெய்து கொடுக்க 10 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.
இதேபோல் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 29ஆவது வார்டு நடூர் பகுதி முனியப்பன் கோவில் வீதி மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 32ஆவது வார்டு அம்மன் நகர், அன்னை நகர் 5 வார்டுக்கு உட்பட்ட சீரங்கராயன் ஓடை, வெள்ளிபாளையம் ரோடு உள்ளிட்ட மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் உள்ள பழுதான தெருவிளக்குகளைச் சரி செய்து தரவேண்டும் என சிஐடியு கோரிக்கை வைத்துள்ளது.
தெருவிளக்குகளைச் சரி செய்யாவிட்டால் பகுதி மக்களைத் திரட்டி தீப்பந்தம் ஏந்தி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என சிஐடியு எச்சரிக்கை விடுத்துள்ளது.