ஆப்நகரம்

கோவை: திருமாவளவன் மீது பாஜகவினர் மேலும் ஒரு புகார்

ஒருவேளை தாமதமாகும் பட்சத்தில் போராட்டம் நடத்த இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி வடவள்ளி மன்றம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Oct 2020, 1:44 pm
பெண்களை இழிவாக பேசியதாக சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் மீது, கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
Samayam Tamil Thol.Thirumavalavan


பெண்களை இழிவாக பேசிய சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவனை உடனடியாக கைது செய்யக்கோரி பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மற்றும் நிர்வாகிகள் சார்பில் வடவள்ளி காவல் ஆய்வாளர் மணிவண்ணனிடம் புகார் மனு கொடுத்தனர்.

பெண்களை இழிவாக பேசியது குறித்தும் , நவராத்திரி பண்டிகை நாட்களில் இவ்வாறு பேசி இருப்பது, பெண்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவது மற்றும் பெண்களை மதமாற்றம் செய்வதற்கான செயல்களில் ஈடுபடுவது ஆகிய குற்றங்கள் இந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பெண்களை இழிவாக நடத்தும் மனுதர்மத்தைத் தடை செய்யக் கோரி தமிழகம் முழுக்க போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு புகார் கோவை

திருமாவுக்குத் துணை நிற்கும் ஸ்டாலின்...

இந்த சம்பவத்தை நீதிபதிகள் உடனடியாக தலையிட்டு திருமாவளவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஒருவேளை தாமதமாகும் பட்சத்தில் போராட்டம் நடத்த இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி வடவள்ளி மன்றம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி