ஆப்நகரம்

அதிமுககாரரை அடித்த சல்மான்கான், தம்பி சாருக்கான் கைது!

கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ரஃபீக். வயது 42. அதிமுக உறுப்பினர். இவர் ஞாயிற்றுக் கிழமை மதியம் மதுக்கரை போலீஸ் ஸ்டேஷன் அருகே நின்று கொண்டிருந்தார்.

Samayam Tamil 4 Jan 2021, 9:49 am
அப்போது அங்கே மதுக்கரைப் பகுதியைச் சேர்ந்த திமுக மாணவரணி துணை அமைப்பாளர் சல்மான்கான்(29) மற்றும் அவரது தம்பி சாருக்கான்(25) ஆகியோர் வந்தனர்.
Samayam Tamil அதிமுககாரரை அடித்த சல்மான்கான், தம்பி சாருக்கான் கைது!
அதிமுககாரரை அடித்த சல்மான்கான், தம்பி சாருக்கான் கைது!


இதற்கிடையே சாருக்கானும், சல்மான்கானும் மதுக்கரை பகுதியைச் சேர்ந்த பெண்களைப் பற்றி இழிவாக ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இந்த சூழலில் ரஃபீக், ஃபேஸ்புக் பெண்கள் விவகாரம் குறித்து அங்கே வந்த கான் சகோதரர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்படித் தொடங்கிய வாக்குவாதம் சண்டையாக மாறியுள்ளது. கான் சகோதரர்கள் 2வரும் இணைந்து ரஃபீக்கை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சண்டையின்போது அங்கு ரஃபீக்கிற்கு ஆதரவாக போலீஸ் ஸ்டேஷன் முன் அதிமுகவினர் குவிந்திருந்தனர்.

கிராம சபை கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட பெண்: ஸ்டாலினுக்கு வேலுமணி சவால்!

அதேபோல் திமுகவினரும் அந்த பகுதியில் குவிந்தனர். இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் உருவானது. இதைத்தொடர்ந்து களத்தில் இறங்கிய போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசினர்.

அதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய சல்மான்கான், சாருக்கான் ஆகிய 2 பேரைக் கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட கான் சகோதரர்கள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டபின் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அடுத்த செய்தி