ஆப்நகரம்

பிளஸ்2 ரிசல்ட்: பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி!

கோவையில் பிளஸ்2 தேர்வு எழுதிய பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்

Samayam Tamil 16 Jul 2020, 10:50 pm
கடந்த மார்ச் 2ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 7,99,717 பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 7,79,931 பேர் தேர்வு எழுதினர். அதில், மாணவியர்கள் 4,24,285 பேரும், மாணவர்கள் 3,55,646 பேரும் அடங்குவர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த நிலையில், பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாநிலம் முழுவதும் மொத்தமாக 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவையை பொறுத்தவரையில் 31 ஆயிரத்து 686 மாணவர்கள் தேர்வெழுதினர். அதில், 96.9 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் கோவை மாவட்டம் தமிழக அளவில் தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

அதேசமயம், கோவையில் கோவையில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் 23 பேர் இந்த பொதுத் தேர்வை எழுதினர். இவர்கள் அனைவரும் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் 96.39 சதவீதம் தேர்ச்சி : 3ஆம் இடத்துக்கு முன்னேறிய கோவை..!

அதேபோல், காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் 35 பேர் தேர்வு எழுதினர். அதில் 29 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 36 பேர் தேர்வு எழுதினர் அதில் 32 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். பிற வகை மாற்றுத்திறனாளிகள் 30 பேர் தேர்வு எழுதினர். அதில் 29 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அடுத்த செய்தி