ஆப்நகரம்

அவர் பதவி விலக வேண்டும்... கம்யூனிஸ்ட் எம்.பி. ஆர்ப்பாட்டம்!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பவை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

Samayam Tamil 20 Oct 2020, 3:58 pm
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, கோவையில் இயங்கிவுரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
Samayam Tamil ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோவையில் ஆர்ப்பாட்டம்


அதில், "கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வந்த மருத்துவ விடுப்பு, சிறப்பு செயல் விடுப்பு ஆகியவை இனிமேல் வழங்கப்படாது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் பல கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. பிஆர் நடராஜன் அவர்களது தலைமையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வனவிலங்குகள் வார விழா...பழங்குடியின மாணவர்களுக்கு இப்படியொரு கௌரவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்தும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், மாதர் சங்க உறுப்பினர்கள், இந்திய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

அடுத்த செய்தி