ஆப்நகரம்

2 வயதுக் குழந்தையைத் தொல்லை செய்த 53 வயது காமுகன் கைது!

கோவை அன்னூர் பகுதியில் 2 வயதுக் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 53 வயது முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Samayam Tamil 4 Jan 2021, 5:13 pm
கோவை அன்னூர் அருகே புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். வயது 53. அதே பகுதியில் ஹாலோபிளாக் செய்யுமிடத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
Samayam Tamil 2 வயதுக் குழந்தையைத் தொல்லை செய்த 53 வயது காமுகன் கைது!
2 வயதுக் குழந்தையைத் தொல்லை செய்த 53 வயது காமுகன் கைது!


இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 2 வயதுக் குழந்தை உள்பட சில குழந்தைகள் ஒன்றாகச் சம்பத்தின் குழந்தைகளுடன் விளையாடுவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

அப்போது குழந்தையின் அலறல் சத்தம் கேட்டுக் குறிப்பிட்ட 2 வயதுக் குழந்தையின் தாய் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது குழந்தைக்கு சம்பத் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி பிறப்பு உறுப்பிற்கு சிகிச்சை: போலீஸ் பாதுகாப்பு!

கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான தாய் தனது பிள்ளையைக் காமுகனிடமிருந்து காப்பாற்றிக் கூட்டிச் சென்றார். தொடர்ந்து குழந்தையை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாகக் குழந்தையின் தாய் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி