ஆப்நகரம்

கோவை ஆணையரைச் சந்தித்த, எம்பி நடராஜன் என்ன பேசினார்?

கோவை மாவட்டம் முழுவதும் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளை தீர்க்க ஒதுக்கப்பட்ட எம்பி நிதி செலவழிக்கப்படாமல் உள்ளது...

Samayam Tamil 20 Oct 2020, 7:48 pm
கோவை மாவட்டத்தில் அடிப்படை கட்டமைப்புகள் மிகவும் மோசமாக இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ள எம்பி நடராஜன், உடனடியாக அதை சீரமைக்கும் பணிக்காக ஒதுக்கப்பட்ட எம்பி நிதியைக் கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோவை மாவட்ட ஆணையரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil கோவை ஆணையரைச் சந்தித்த, எம்பி நடராஜன் என்ன பேசினார்?
கோவை ஆணையரைச் சந்தித்த, எம்பி நடராஜன் என்ன பேசினார்?


கோவை மாநகரத்தின் மையப் பகுதிகள் சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, குறிச்சி, சுந்தராபுரம் எனப் புறநகர்ப் பகுதிகளிலும் சாலை, சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் இதுவரையில் சீர் செய்யப்படாமல் உள்ளது. இதற்கிடையே மாவட்டத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள எம்பி நிதியிலிருந்து பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எம்பி நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட தொகையும் பயன்படுத்தப்படாமல், எந்த பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதையடுத்து குறிப்பிட்ட அடிப்படை பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பலர் கோரிக்கைகளை அரசு அதிகாரிகளிடம் வழங்கி வருகின்றனர்.

இதையடுத்து செவ்வாய்க் கிழமை கோவை மாநகராட்சி ஆணையர் பெ. குமரவேலை நேரில் சென்று சந்தித்த எம்பி நடராஜன், மாவட்டத்தில் சீரமைக்க வேண்டிய அடிப்படை கட்டமைப்புகளை உடனடியாக விரைந்து முடித்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை ஒன்றை வைத்தார்.

அவர் பதவி விலக வேண்டும்... கம்யூனிஸ்ட் எம்.பி. ஆர்ப்பாட்டம்!

மேலும், பல்வேறு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள எம்பி நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட தொகையைப் பயன்படுத்தி பணிகளைத் தொடங்க வேண்டும் என்பதையும் எம்பி நடராஜன், இந்த சந்திப்பின்போது வலியுறுத்தினார்.

இதுபோன்ற அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்களும் கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.

இந்த சந்திப்பின்போது, எம்பி நடராஜனிடம் மாநகர ஆணையர் விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற உறுதியை வழங்கினார்.

அடுத்த செய்தி