ஆப்நகரம்

பெரியார் சிலை அவமதிப்பு: தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது!

கோவை சுந்தராபுரத்தில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசியதாக கைது செய்யப்பட்ட பாரத் சேனா அமைப்பின் நிர்வாகி அருண் கிருஷ்ணன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Jul 2020, 10:44 am
பெரியார் சிலைகள் தாக்கப்படும் சம்பவங்கள் பல இடங்களில் நடந்து வருகிறது. இதற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பெரியார், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு காவி சாயம் பூசுவது பல்வேறு இந்து அமைப்புகளால் முன்னெடுக்கப்படுகிறது.
Samayam Tamil periyar statue desecration


கோவை சுந்தராபுரம் பகுதியில் பொள்ளாச்சி செல்லும் சாலையில் உள்ள பெரியார் சிலை மீது கடந்த ஜூலை 17ஆம் தேதி காவிச்சாயம் ஊற்றப்பட்டது.

இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் கலகம் ஏற்படுத்துதல், விரோத உணர்ச்சியை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

ஜெ., இல்லத்தில் இத்தனை கிலோ தங்கமா? அரசிதழ் சொன்ன தகவல்!

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தேடிவந்த நிலையில், போத்தனூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் (21) போத்தனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

சென்னை தவிர பிற இடங்களில் பொது போக்குவரத்தா? முதல்வர் ஆலோசனை!

தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அருண் கிருஷ்ணன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான ஆணையை கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித்சரண் பிறப்பித்தார். ஆணை தொடர்பான ஆவணம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருண் கிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.

அடுத்த செய்தி