ஆப்நகரம்

கொரோனா தீவிரம் கோவையில் முன்னெச்சரிக்கை, ரோடுகள் எம்ப்டி!

கொரோனா பரவல் காரணமாக கோவையில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான கடைகள் மதியத்திற்குள் அடைக்கப்பட்டன.

Samayam Tamil 6 May 2021, 11:47 pm
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில் இன்று முதல் புதிதாக அமைந்துள்ள தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது.
Samayam Tamil கொரோனா தீவிரம் கோவையில் முன்னெச்சரிக்கை, ரோடுகள் எம்ப்டி!


அதன்படி மருந்துக்கடைகள் பால் விநியோக கடைகள், பெட்ரோல் பங்க் தவிர்த்து இதர கடைகள் அனைத்தும் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளது. பேருந்துகளிலும் ரயில்களிலும் 50 சதவிகிதம் பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி அளித்துள்ளது.

அதன் பொருட்டு இன்று கோவையில் 12 மணி வரை செயல்பட்டு வந்த இறைச்சிக் கடைகள், மளிகைக் கடைகள், இதர கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. பெரிய ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் ஆகியவை காலை முதலே மூடப்பட்டிருந்தன.

காட்டு யானையை கல்லால் அடித்து விளையாடும் சிறுவர்கள் வீடியோ: திருப்பூர் பாய்ஸ் அட்ராசிட்டி!

இதனால் பெரும்பாலான இடங்களில் மக்கள் நடமாட்டமிருந்தாலும் வெறிச்சோடி காணப்பட்டன. கொரோனா தீவிரமடைந்துள்ள சூழலில், இந்த தீவிர கட்டுப்பாடுகள் மட்டுமே நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத்துறையினர் நம்புகின்றனர்.

அடுத்த செய்தி