ஆப்நகரம்

நீட் ரிசல்ட் வரட்டும்...அப்புறம் பாருங்க சூர்யாவை... பாஜக அண்ணாமலை சவால்!!

நீட் தேர்வு முடிவகள் வெளிவந்த பின்னர் இத்தேர்வு குறித்த தனது நிலைப்பாட்டை நடிகர் சூர்யா மாற்றிக்கொள்வார் என்று பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Sep 2020, 9:23 pm
பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா கோவை சுங்கம் பகுதியில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்ளிடம் அவர் கூறியது:
Samayam Tamil annamalai bjp


தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உள்ளது. கூட்டணிக்குள் முரண்பாடுகள் வருவது சகஜமானது. மும்மொழி கொள்கை விவகாரத்தில் பாஜக தெளிவாக உள்ளது. புதிய கல்வி கொள்கையை எல்லா மாநிலங்களும் ஏற்க ஆரம்பித்துள்ளன.

தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கை தொடருமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருப்பது அவரது கருத்து. தமிழக மக்களும் மும்மொழி கொள்கை வேண்டுமென நினைக்கின்றனர்.

ட்ரம்ப்புக்காக இந்துக்கள் தேர்தல் பிரச்சாரம்- அர்ஜுன் சம்பத்!

பெரியார் தவிர்க்க முடியாத தலைவர் தான். ஆனால் அதற்காக அவரது பல கொள்கைகளை ஏற்கமாட்டோம். மக்களுக்காக பாடுபட்ட பெரியாரின் சில கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறோம். மாணவர்கள் மூன்று மொழி படிப்பதால் அறிவுத்திறன் அதிகரிக்கும். இந்தி மொழி விவகாரத்தில் திமுக இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது.

நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது துர்திஷ்டவசமானது. நீட் தேர்வு குறித்து தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டது. நீட் விவகாரத்தை அரசியல் தலைவர்கள் அரசியலாக்குகிறார்கள்.

இந்து அமைப்பைச் சேர்ந்தவர் ரோட்டில் ஓட ஓட வெட்டி கொலை!

நடிகர் சூர்யா நல்ல மனிதர், நல்ல நடிகர். நீட் தேர்வு குறித்த அவரின் அறிக்கை லட்சுமண ரேகையை தாண்டும் வகையில் இருந்தது. சூர்யாவின் கேள்விக்கான விடையை 2020 நீட் ரிசல்ட் தரும். நீட் தேர்வு ரிசல்ட் வந்த பின்னர் நீட் குறித்த தனது நிலைப்பாட்டை சூர்யா மாற்றிக்கொள்வார் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

அடுத்த செய்தி