ஆப்நகரம்

பாஜக கட்சியினர் நடத்திய கிடாவிருந்தில், ஒருவர் படுகொலை!!

பாஜக கட்சியினர் நடத்திய கிடாவிருந்தில், ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Oct 2018, 4:06 pm
கோவை: பாஜக கட்சியினர் நடத்திய கிடாவிருந்தில், வரவு செலவு கணக்கில் ஏற்பட்ட தகராறில், ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil பாஜக கட்சியினர் நடத்திய கிடாவிருந்தில், ஒருவர் படுகொலை!!
பாஜக கட்சியினர் நடத்திய கிடாவிருந்தில், ஒருவர் படுகொலை!!


கோவை மாவட்டம் ஆலந்துறை பகுதியைச் சேர்ந்த பாஜகவினர், விநாயகர் சதுர்த்திக்காக அங்குள்ள மக்களிடம் பணம் வசூலித்து விழா நடத்தியுள்ளனர். இந்த விழா நடத்தியது போக, பணம் மீதி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மீதமான பணத்தை வைத்து, பாஜகவினர் கடந்த 30 ஆம் தேதி, மதுவுடன் கூடிய கிடாவிருந்து வைத்துள்ளனர். அப்போது, பண வரவு செலவுக் கணக்குப் பார்ப்பதில் அவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தப் பிரச்சனையில், பாஜக பிரமுகரான நாகராஜ் என்பவரை, பாஜக இளைஞர் அணி தலைவரான குட்டி என்கிற கந்தசாமி பாட்டிலால் குத்தியுள்ளார். இதையடுத்து, அவரை கோவையில் உள்ள கே.ஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, சிகிச்சைப் பெற்று வந்த அவர், நேற்று மாலை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, தலைமறைவாகி உள்ள கந்தசாமி மீது வழக்குப் பதிவு செய்து, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி