ஆப்நகரம்

கமலை கடுமையாக சாடிய வானதி சீனிவாசன் - ஊழல் கறைபடிந்த கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர் என விமர்சனம்!

ஊழல் கறை படிந்த காங்கிரஸ் திமுகவின் நட்சத்திர பேச்சாளராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இருப்பதாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.

Written byபிரபாகர் B | Samayam Tamil 29 Apr 2023, 12:20 pm

ஹைலைட்ஸ்:

  • கமல்ஹாசன் மீது வானதி சீனிவாசன் விமர்சனம்
  • பாஜக எங்கு போட்டியிட்டாலும் வெற்றிபெறும் என நம்பிக்கை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil vanathi
vanathi
கோவை பந்தய சாலையில் உள்ள கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அந்த தொகுதியின் எம்எல்ஏவும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கோடை கால இலவச நீர் மோர் பந்தலை துவங்கி வைத்தார்.
சட்டம் ஒழுங்கு - குற்றச்சாட்டு

பின்னர் செய்தியாளர்களை அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறியதாவது,
சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் இருக்கிறதா என்ற ஒரு கேள்வி எழுப்புகிறது. தமிழகம் அமைதி பூங்கா என்று சொல்கிற நிலைமை மாறி கீழ இறங்கி செல்கிறது. மாநில அரசாங்கத்தின் தொடர்புடைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தான் கவலைப்படுகிறார்கள். கோவையில் 15 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனை சரியாகும் என்றார்கள். நடவடிக்கை இல்லை.

கமல் மீது விமர்சனம்

மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை கொண்டு வருகிறோம் என்றார்கள். நான் ஏற்கனவே இந்த தொகுதியில் தோல்வி அடைந்து பணி செய்தேன். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று திமுக காங்கிரசுடன் இருப்பது என்ன? ஊழல் கரை படிந்த காங்கிரஸ், திமுகவின் நட்சத்திர பேச்சாளர் கமல். பாஜகவை பொறுத்தவரையில் கோவை மட்டுமின்றி எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறும்.
கோவையை மீண்டும் குறி வைக்கிறாரா கமல்?... அரசியல் ஆட்டத்தை தொடங்கிய ஆண்டவர்... மநீம கூட்டத்தில் நடந்தது என்ன?
கர்நாடகாவில் பாஜக ஆட்சியை பிடிக்கும்

பாரதிய ஜனதா கட்சியினுடைய வெற்றி வாய்ப்பு கர்நாடகாவில் பிரகாசமாக உள்ளது. கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை. பாஜகவில் எவ்வளவு பெரிய தலைவர்கள் சென்றாலும் பாதிப்பு வராது. தொண்டர்கள் கட்சியோடு இருக்கிறார்கள்.


உள்துறை அமைச்சர் பிரதமர் பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை பாஜக தனி பெரும்பான்மை உடன் வரும். தமிழ் தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக அண்ணாமலை ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டார். இனி அதனை மீண்டும் நோண்ட வேண்டாம். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி