ஆப்நகரம்

அண்ணாமலையை புறக்கணிக்கும் பாஜக சீனியர்கள்: நிரூபித்த சிபி.ராதாகிருஷ்ணன்!

பாஜக சீனியர்கள் அண்ணாமலையை புறக்கணிக்கிறார்கள் என்னும் செய்தி தமிழக அரசியலில் புயலாக பரவும் நிலையில் முன்னாள் எம்பி சிபி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்ளாதது பாஜக நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Curated bySrini Vasan | Samayam Tamil 8 Apr 2022, 7:13 pm

ஹைலைட்ஸ்:

  • அண்ணாமலையை புறக்கணிக்கும் பாஜக சீனியர்கள்
  • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாத அண்ணாமலை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கோப்புப்படம்
தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் காந்தி பார்க் பகுதியில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் எம்பி சிபி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். " சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும், சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்" ஆகிய பதாதைகளை ஏந்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய சிபி ராதாகிருஷ்ணன்,

சொல்வதை செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்து விட்டு சொல்லாததை எல்லாம் செய்பவர்கள்தான் திமுகவினர். சொத்தையே விற்று கட்டுவது போல் சொத்து வரியை உயர்த்தி உள்ளதாகத் தெரிவித்தார்.

அதிமுகவினர் மத்திய அரசிடமிருந்து தேவையானவற்றை பெரும்பொழுது அடிமை அரசு என கூறிய இவர்கள் தற்போது அனைத்திற்கும் டெல்லியை பார்த்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். கையாளாகாத அரசு ஆட்சி பொறுப்பில் உள்ளதாகவும் கூறினார்.
இறையன்பு போட்ட சூப்பர் உத்தரவு; கோவை விவசாயிகள் செம ஹேப்பி!
திமுக பெற்றுள்ள கடைசி வெற்றி இந்த வெற்றிதான் என்றும் திமுக கட்சியின் பெயரை கொலுசு பார்ட்டி என்றும் அவர்களது உதயசூரியன் சின்னத்தை கொலுசு சின்னமாக மாற்றி வைத்துக் கொள்ளலாம் எனவும் கூறினார்.

திமுக அரசு மத்திய அரசுதான் சொத்து வரியை உயர்த்தியதற்கு காரணம் எனறு கூறினால் அதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும் எனவும் திமுகவினருக்கு பக்கவாத்தியங்கள் அதிகம் என என பாலகிருஷ்ணன், திருமாவளவன், வைக்கோ ஆகியவர்களை சுட்டிக்காட்டினார்.

பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் வாக்குறுதிகள் சொல்லாமலேயே பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது மத்திய அரசு தான் என்றும் தற்போது வேதனையோடு பெட்ரோல் விலையை உயர்த்துகின்ற சூழ்நிலையில் மத்திய அரசு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை.

பாஜக சீனியர்கள் அண்ணாமலையை புறக்கணிக்கிறார்கள் என்னும் செய்தி தமிழக அரசியலில் புயலாக பரவும் நிலையில் முன்னாள் எம்பி சிபி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்ளதது பாஜக நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி