ஆப்நகரம்

அமைச்சர் செந்தில் பாலாஜி அவமதிப்பு வழக்கு; பாஜக மாநில தொழில் பிரிவு துணைத் தலைவருக்கு 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

பாஜக மாநிலத் தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார், அமைச்சர் செந்தில் பாலாஜியை துஷ்பிரயோக வார்த்தைகளை பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவுகளை பதிவிட்டதாக கைதுசெய்யப்பட்ட நிலையில், 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 12 Apr 2023, 7:36 pm
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அவதூறு பரப்பிய வழக்கு:
Samayam Tamil பாஜக மாநில தொழில் பிரிவு துணைத் தலைவருக்கு 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
பாஜக மாநிலத் தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் அமைச்சர் செந்தில் பாலாஜியை துஷ்பிரயோக வார்த்தைகளை பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவுகளை பதிவிட்டதாக கைதுசெய்யப்பட்ட பாஜக மாநில தொழிற்பிரிவு துணைத் தலைவருக்கு 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.


பாஜக மாநிலத் தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் அமைச்சர் செந்தில் பாலாஜியை துஷ்பிரயோக வார்த்தைகளை பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவுகளை பதிவிட்டதாக கோவை கணபதி புதூர் பகுதியே சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று காலை செல்வகுமாரை கைது செய்தனர்.

இதனை அடுத்து அவர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம் 4 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு வரும் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.


இதனை அடுத்து அவர் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் பாரத் மாதா கி ஜே என்ற முழக்கங்களை எழுப்பியவாறு சென்றார். நீதிமன்றத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட பாஜகவினர் சிலர் திரண்டு இருந்தனர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கொங்கு மண்டலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி:

தமிழகத்தில் திமுக ஆட்சி இருந்தாலும், கொங்கு மண்டலமான கோவையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் முழுமையாக அதிமுக கூட்டணி கட்சிகள் கைப்பற்றியது.‌ இந்நிலையில் கோவை மாவட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் கோவை மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து சிறப்பாக கையாள மின்சாரதுறை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பொறுப்பு அமைச்சராக தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் புதிய திட்டங்கள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

டுவிட்டர் பக்கத்தில் கஞ்சா உட்பட போதை பொருட்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஒப்பிட்டு பதிவு:

இந்நிலையில் கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாஜக மாநில தொழில்துறை பிரிவு துணை தலைவராக உள்ள செல்வகுமார் என்பவர் நேற்றைய தினம் ஏப்ரல் 11ஆம் தேதி அவரது சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் கஞ்சா உட்பட போதை பொருட்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஒப்பிட்டு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனை அடுத்து கோவை கணபதி புதூரை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நேற்றய தினம் புகார் அளித்தார்.

தேர்தலில் ஜெயிச்ச எம்எல்ஏ உங்களை பார்க்க வந்தாரா?.. காஞ்சிபுரத்தில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் சரமாரி கேள்வி!

சமூக வலைதளத்தில் செல்வகுமார் பதிவிட்டு வரும் கருத்துக்கள் இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக புகாரில் கூறப்பட்டதுடன், அமைச்சர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பரப்புவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பதற்றத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பா.ஜ.க நிர்வாகி செல்வக்குமார் மீது மாநகர கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை இன்று காலை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து அவருக்கு வரும் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி