ஆப்நகரம்

எதற்காக வேல் யாத்திரை..? பாஜக தலைவர் ஓபன் டாக்!

பாஜகவில் இணையத் தமிழ்நாட்டில் உள்ள பிற கட்சித் தலைவர்கள் எனப் பலர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Nov 2020, 10:55 pm
வேல் யாத்திரை அரசியல், தமிழ்நாட்டில் பாஜகவின் நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பாஜக தலைவர் முருகன் பேசியுள்ளார்.

கோவையில் வைத்து பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் எல். முருகன் செய்தியாளருக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தினந்தோறும், பல்வேறு தரப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்களை பாஜகவில் இணைத்துக் கொள்கின்றனர். இப்போது கோவையில் பல்வேறு தொழில்துறை சார்ந்த 120 பேர் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் பாஜகவில் இணைவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். புதிதாகக் கட்சியில் இணைபவர்களை பாஜக வரவேற்கிறது. வேல் யாத்திரை திட்டமிட்டபடி தர்மபுரியில் நாளை தொடங்க இருக்கிறது. இது மாநிலத்தில் பாஜகவின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

21ஆம் தேதி தமிழ்நாடு வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளிலும் பொது இடங்களிலும் தனி மனித இடைவெளியைப் பின்பற்றாமல் பலர் கூட்டம் கூட்டமாகச் சென்று வருகின்றனர்.

2 முயல் ரூ. 500, இடம்: கோவை மத்தியச் சிறை!

இந்து கடவுள்களையும், கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்தியவர்களைக் கண்டிப்பதற்காகவே வேல் யாத்திரை நடத்தப்படுகிறது. தீவிரவாதிகளைக் கையாள்வதில் தமிழ்நாடு அரசு மெத்தனம் காட்டுகிறது. அதைத் தான் பாஜக தலைவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் முத்ரா கடன் அதிகம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

அமித்ஷாவின் வருகை தமிழ்நாட்டில் இம்முறை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். வரும் 22ஆம் தேதி கோவையில் வேல் யாத்திரை நடைபெற இருக்கிறது.

அடுத்த செய்தி